Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, June 26, 2007

மணி Proposes பத்மினி Disposes

மச்சி, PVRCinmeas site open ஆகுதா ?? தலைவர் படத்துக்கு டிக்கெட் book பண்ணனும்டா.
நம்மள மாதிரி 1000 பேரு try பண்ணுவாங்கடா..slow-வா தான் இருக்கும்.
ஹேய்ய்ய்..book பண்ணிடோம்ல book பண்ணிடோம்ல..
பேப்பர வீசி, விசில் அடிச்சு, படம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு..
மச்சி, சனிக்கிழமை போறோம், பட்டைய கிளப்புறோம்.. Bangalore-ஏ சும்மா அதிரணும்.
கண்டிப்பா மச்சி.
[இதுல முதல்ல மச்சின்னு கூப்பிட்டது சுரேஷ், கடைசியா மச்சின்னு சொன்னது மணி ரெண்டு பேரும் ஒரே ஊரு, ஒரே கம்பெனியில் Software Engineer-a குப்பை கொட்றாங்க]

மணி, தலைவர் தலைவர் தான். சான்ஸே இல்ல,அதுவும் மொட்டை பாஸ் ultimate.
சரி எங்க சாப்பிடலாம், PIZZA HUT போலாமா?
டேய் மணி, உன்கிட்ட தான்டா பேசுறேன்...அங்க எந்த பிகர பாத்துக்கிட்டு இருக்க?
அங்க பாரு மச்சி, நம்ம QA team பத்மினி..யாரோடயோ போறா..
ஆஹா மச்சி..உன் காதலுக்கு வில்லன் வந்துட்டானா ?
காதலும் இல்ல ஒரு கண்றாவியும் இல்ல..
டேய், எங்ககிட்டயே வா.. அப்போ எதுக்கு daily lunch அவ போற நேரத்துக்கே போற? அவ எப்ப cafeteria போனாலும், நீ அங்க இருக்க?

தப்பு மச்சி..நம்ம போற நேரத்துக்கு தான் அவ வர்றா..
நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. டேய் நம்ம மூஞ்சிய எல்லாம், நம்மலாலயே கண்ணாடில பாக்க முடியாது..இதுல இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல,வா போய் சாப்பிடலாம்..

சுரேஷ் சொல்லவதும் உண்மை தான்.மணிக்கு பத்மினி மேல் ஒரு ஈர்ப்பு. மணிக்கு இந்த மாதிரி நெறைய பேரிடம் ஈர்ப்பு உண்டு. தற்சமயம் அது பத்மினி மீது ஒரு [தலை,கை, கால்] காதலாக மாறிவிட்டது. பத்மினிக்கு இப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாது. ஏன்னா,
மணிக்கு கூச்ச சுபாவம் பொண்ணுங்கள பார்த்தாலே வெட்கம் வந்துடும். அதனால சைட் அடிக்கும் போது கூட தள்ளி நின்னு தான் சைட் அடிப்பான்.காலம் இப்படியே போச்சு [எப்படியே ன்னு எல்லாம் கேள்வி கேக்க கூடாது]

ஒரு Valentines Day அன்னைக்கி, மணியும் சுரேஷும் ஒரு ஹோட்டல்க்கு போறாங்க, அங்க ஒரு டேபிள்ல பத்மினி தனியா உக்கந்திருக்கா.மணிக்கு அவள பார்த்த உடனே ஒரே குதூகலம்.

மச்சி, அவ இருக்காடா
இருக்கட்டும், இப்ப என்ன பண்ணனும் ?

நான் அவ கிட்ட பேசணும்டா
சரி போய் பேசு,இதுக்கு என்ன நல்ல நேரம் ராகு காலமா பாத்துக்கிட்டு இருக்க முடியும்.

சும்மா இல்ல மச்சி, இன்னைக்கி Valentines Day, என் மனசுல இருக்கிறத அவ கிட்ட சொல்ல போறேன்.
என்ன கிண்டலா ? நீ யாருன்னே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மட்டும் இல்ல, இப்ப அவ கத்தி கூச்சல் போட்டு கூட்டம் சேந்துச்சினா,எனக்கும் நீ யாருன்னே தெரியாது.
நீ என்ன வேணும்னாலும் சொல்லு..நான் போய் சொல்ல தான் போறேன்

[மணி பத்மினி அருகில் செல்கிறான். சுரேஷ் என்ன நடக்குமோ என்று பார்க்கிறான். மணி சென்றவுடன் பத்மினி அவனிடம் ஏதோ சொல்கிறாள்..மணி திரும்பி வருகிறான்]

டேய் என்னடா சொன்னா ?
ஒண்ணும் சொல்லலை
பொய் சொல்லாதடா..நான் இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்தேன், அவ ஏதோ சொன்னா.
சொல்லு, என்ன சொன்னா ?

இந்த plates-a எல்லாம் Dispose பண்ணுங்கன்னு சொன்னா :(