Monday, July 02, 2007

Be Happy

கொஞ்ச நாளைக்கு முன்னால, என்னோட friendகிட்ட ஒரு கவிதையை பத்தி பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவங்க சொன்னாங்க, எந்த நல்ல கவிதையிலும் கொஞ்சம் சோகம் கலந்து இருக்கும்ண்ணு. நம்ம மெலடி பாட்டுக்கள் முக்கால்வாசி சோக பாட்டு தான்னு சொன்னாங்க. அது உண்மையா இல்லையான்னு இப்ப நம்ம ஆராய வேண்டாம். விஷயம் என்னன்னா... இந்த சோகம், சுண்ணாம்பு எல்லாம் எதுல வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா, இனிமேல் என்னோட பதிவுல இருக்காது.


Tuesday, June 26, 2007

மணி Proposes பத்மினி Disposes

மச்சி, PVRCinmeas site open ஆகுதா ?? தலைவர் படத்துக்கு டிக்கெட் book பண்ணனும்டா.
நம்மள மாதிரி 1000 பேரு try பண்ணுவாங்கடா..slow-வா தான் இருக்கும்.
ஹேய்ய்ய்..book பண்ணிடோம்ல book பண்ணிடோம்ல..
பேப்பர வீசி, விசில் அடிச்சு, படம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு..
மச்சி, சனிக்கிழமை போறோம், பட்டைய கிளப்புறோம்.. Bangalore-ஏ சும்மா அதிரணும்.
கண்டிப்பா மச்சி.
[இதுல முதல்ல மச்சின்னு கூப்பிட்டது சுரேஷ், கடைசியா மச்சின்னு சொன்னது மணி ரெண்டு பேரும் ஒரே ஊரு, ஒரே கம்பெனியில் Software Engineer-a குப்பை கொட்றாங்க]

மணி, தலைவர் தலைவர் தான். சான்ஸே இல்ல,அதுவும் மொட்டை பாஸ் ultimate.
சரி எங்க சாப்பிடலாம், PIZZA HUT போலாமா?
டேய் மணி, உன்கிட்ட தான்டா பேசுறேன்...அங்க எந்த பிகர பாத்துக்கிட்டு இருக்க?
அங்க பாரு மச்சி, நம்ம QA team பத்மினி..யாரோடயோ போறா..
ஆஹா மச்சி..உன் காதலுக்கு வில்லன் வந்துட்டானா ?
காதலும் இல்ல ஒரு கண்றாவியும் இல்ல..
டேய், எங்ககிட்டயே வா.. அப்போ எதுக்கு daily lunch அவ போற நேரத்துக்கே போற? அவ எப்ப cafeteria போனாலும், நீ அங்க இருக்க?

தப்பு மச்சி..நம்ம போற நேரத்துக்கு தான் அவ வர்றா..
நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. டேய் நம்ம மூஞ்சிய எல்லாம், நம்மலாலயே கண்ணாடில பாக்க முடியாது..இதுல இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல,வா போய் சாப்பிடலாம்..

சுரேஷ் சொல்லவதும் உண்மை தான்.மணிக்கு பத்மினி மேல் ஒரு ஈர்ப்பு. மணிக்கு இந்த மாதிரி நெறைய பேரிடம் ஈர்ப்பு உண்டு. தற்சமயம் அது பத்மினி மீது ஒரு [தலை,கை, கால்] காதலாக மாறிவிட்டது. பத்மினிக்கு இப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாது. ஏன்னா,
மணிக்கு கூச்ச சுபாவம் பொண்ணுங்கள பார்த்தாலே வெட்கம் வந்துடும். அதனால சைட் அடிக்கும் போது கூட தள்ளி நின்னு தான் சைட் அடிப்பான்.காலம் இப்படியே போச்சு [எப்படியே ன்னு எல்லாம் கேள்வி கேக்க கூடாது]

ஒரு Valentines Day அன்னைக்கி, மணியும் சுரேஷும் ஒரு ஹோட்டல்க்கு போறாங்க, அங்க ஒரு டேபிள்ல பத்மினி தனியா உக்கந்திருக்கா.மணிக்கு அவள பார்த்த உடனே ஒரே குதூகலம்.

மச்சி, அவ இருக்காடா
இருக்கட்டும், இப்ப என்ன பண்ணனும் ?

நான் அவ கிட்ட பேசணும்டா
சரி போய் பேசு,இதுக்கு என்ன நல்ல நேரம் ராகு காலமா பாத்துக்கிட்டு இருக்க முடியும்.

சும்மா இல்ல மச்சி, இன்னைக்கி Valentines Day, என் மனசுல இருக்கிறத அவ கிட்ட சொல்ல போறேன்.
என்ன கிண்டலா ? நீ யாருன்னே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மட்டும் இல்ல, இப்ப அவ கத்தி கூச்சல் போட்டு கூட்டம் சேந்துச்சினா,எனக்கும் நீ யாருன்னே தெரியாது.
நீ என்ன வேணும்னாலும் சொல்லு..நான் போய் சொல்ல தான் போறேன்

[மணி பத்மினி அருகில் செல்கிறான். சுரேஷ் என்ன நடக்குமோ என்று பார்க்கிறான். மணி சென்றவுடன் பத்மினி அவனிடம் ஏதோ சொல்கிறாள்..மணி திரும்பி வருகிறான்]

டேய் என்னடா சொன்னா ?
ஒண்ணும் சொல்லலை
பொய் சொல்லாதடா..நான் இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்தேன், அவ ஏதோ சொன்னா.
சொல்லு, என்ன சொன்னா ?

இந்த plates-a எல்லாம் Dispose பண்ணுங்கன்னு சொன்னா :(

Sunday, June 17, 2007

நீ வருவாய் என - V

பகுதி I
பகுதி II பகுதி III பகுதி IV

இரவின் தூக்கமின்மை ரவியின் கண்களில் தெரிந்தது. வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.சுஜியை அவன் இப்போது இங்கு எதிர் பார்க்கவில்லை. அவள் முகத்தைப் பார்க்க கூட அவனால் முடியவில்லை. ரவி ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்கும் புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று அவள் அமைதியாக இருந்தாள். இருவரின் மௌனத்தால், அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. நல்ல நட்புகளுக்கும், காதல்களுக்கும் இடையே உள்ள மௌனம் அழகாக இருக்கும். ஆனால் அங்கு நிலவிய மௌனத்தை இருவராலும் ரசிக்க முடியவில்லை சுஜியே மௌனத்தைக் கலைத்தாள்

சுஜி: என்னாச்சு ரவி ? ஏன் திடீர்னு கிளம்பி வந்துட்ட ? உனக்கு ரமேஷ பிடிக்கலையா ? இல்ல நான் love பண்றது பிடிக்கலையா ? ஏதாவது பேசு ரவி. இப்படியே பேசாம இருக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல.
[அவள் முகத்தைப் பார்க்காமல், திரும்பி நின்றபடியே பேச ஆரம்பித்தான்]
ரவி: என்னால இப்ப எதுவும் பேச முடியாது
சுஜி: உன்னைய பாத்தாலே தெரியுது, ராத்திரி எல்லாம் தூங்கலைன்னு. என்ன பிரச்னை உனக்கு? ஒண்ணும் இல்லன்னு மட்டும் சொல்லாத.
ரவி: எனக்கு நிஜமாவே தெரியல சுஜி, எப்ப இருந்து எனக்கு உன்மேல...[வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளிவர மறுத்தன] நான் இது வரைக்கும் அப்படி எல்லாம் நினைச்தசதே இல்ல. ஆனா நேத்து நீ கோவில்ல சொன்னவுடனே, எனக்கு என்ன சொல்லணு தெரியல.
சுஜி: நான் உன்னைய அப்படி நினைக்கலையே ரவி. கடைசி வரைக்கும் எனக்கு ஒரு நல்ல frienda தான் இருக்கணும்னு நினைச்சேன். என்னால உன்னைய அப்படி நினைக்க முடியல ரவி. எனக்கு உன் மேல அப்படி ஒரு நினைப்பே வந்தது இல்ல. எங்க அம்மா, அப்பா மாதிரி தான் ரவி நீயும் எனக்கு. கடைசி வரைக்கும் ஒரு நல்ல நண்பனா மட்டுமே தான் என்னால உன்னைய பாக்க முடியும். என்னால உன்னைய வேற எந்த உறவோடையும் கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. நீ என் காதலன் சொல்றத விட நீ என் நண்பன் சொல்றதுல தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. இதை எல்லாம் மறந்துட்டு, திரும்ப பழைய மாதிரியே ஒரு நல்ல frienda இரு ரவி, ப்ளீஸ்.
ரவி: எல்லாத்தையும் மறக்கணும்னு தான் நினைக்கிறேன், என்னால முடியல சுஜி. மனசுக்குள்ள இப்படி ஒரு என்ணத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட ஒரு நல்ல frienda பழக முடியும்னு எனக்கு தோணலை
சுஜி: இப்படி எல்லாம் பேசாத ரவி. எனக்கு கஷ்டமா இருக்கு. உன்னால முடியும் ரவி. நாம பழைய மாதிரியே இருக்கலாம்.
ரவி: இல்ல சுஜி. என்னால, உன் முன்னாடி நடிக்க முடியாது.நான் உன்கூட இருக்குற வரைக்கும் உனக்கும் கஷ்டம்,எனக்கும் கஷ்டம்.
சுஜி: எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. நீ இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு. நான் எப்பவும் மாதிரி தான் ரவி இருப்பேன். என்னால உனக்கு ஒரு கஷ்டமும் வராது.
ரவி: உனக்கு ஒரு நல்ல frienda மட்டும் இருக்க முடியும்னு எனக்கு தோணலை சுஜி. இனிமேல் என்னைய பாக்க வராத என்னால முன்னாடி மாதிரி உன்கூட பேசவோ பழாகவோ முடியாது.
சுஜி: நான் என்ன ரவி தப்பு பண்ணினேன் ? எனக்கு ஏன் தண்டனை கொடுக்குற. நீ இப்ப நல்ல மூட்ல இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பாரு. நம்ம friendship வேண்டாம்ன்ணு மட்டும் சொல்லிடாத.
ரவி: நான் யோசிச்சிட்டுத் தான் சொல்லிறேன். இது ரெண்டு பேருக்கும் கஷ்டம். வேண்டாம்.
[சுஜி எவ்வளவோ முயற்சித்தும், ரவியின் மனத்தை அவளால் மாற்ற முடியவில்லை அன்றிலிருந்து அவன் அவளின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டான் இன்று இருவரும் ஒரே அலுவலகத்திலும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறான். சுஜியின் நினைவுகள் கலைகின்றன..மறு நாள் ]
ஷீலா: சுஜி, ரவி resign பண்ணிட்டானம். ஏன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ? எங்க போறன்ணு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ?
சுஜி: ஓ..அப்படியா ??
[ரவி அவளிடம் இறுதி வரை பேசவில்லை. ரவி அந்த அலுவலகத்தை விட்டுச்சென்ற மறுநாள், சுஜிக்கு அவனிடமிருந்து வந்த மின்னஞ்சல்]

சுஜி,
உன்னைய hurt பண்ணினதுக்கு மன்னிச்சுடு. என்னால உன்னைய மறக்க முடியல. என்னைய விரும்புன்னு உன்னைய எப்படி நான் கட்டாயப்படுத்த முடியாதோ, அதே மாதிரி தான் என்னாலயையும் என் மனச கட்டாயப்படுத்த முடியல உன்னைய மறக்குறதுக்கு. நாம பக்கத்துல இருக்குற வரைக்கும், இது மாறப்போறது இல்ல. அதான் கொஞ்சம் விலகி போறேன்.

அன்புடன்,
ரவி.

முற்றும்.

Thursday, June 14, 2007

நீ வருவாய் என - IV



பகுதி I பகுதி II பகுதி III

சுஜி: ரவி, என்ன பண்ணுற ?
ரவி: ஆபீசில என்ன ஆடு, மாடா மேய்ப்பாங்க ? வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.
சுஜி: சரி பாத்த வரைக்கும் போதும், உங்க ஆபீஸ் Reception-க்கு வா.
ரவி: யேய், இங்கயா இருக்க ? இரு வர்றேன்.
[ஆபீசிற்கு வெளியே இருவரும் சந்திக்கின்றனர்]
ரவி: இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
சுஜி: உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?
ரவி: என்ன ?
சுஜி: நேத்து உங்க ஆபீசில இருந்து எனக்கு Interview call வந்தது உனக்கு surprise-அ இருக்கட்டுமேன்ணு தான் உன்கிட்ட சொல்லாம வந்தேன்.
ரவி: எப்ப forward பண்ணின ? இன்னைக்கா Interview?
சுஜி: ஏதோ ஒரு job site-ல இருந்து என்னோட Resume எடுத்துருப்பாங்க போல..Interview இப்பத்தான் முடிஞ்சது,நல்லா பண்ணிருக்கேன்.
ரவி: ஓ..குட் கலக்குற..
சுஜி: சரி இன்னைக்கி ஈவினிங் ராகிகுடா கோவில்க்கு வா, உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். சரியா ?? நான் இப்ப கிளம்பறேன், bye.
ரவி: சரி வா, உன்னைய drop பண்ணிட்டு நான் ஆபிஸ்க்கு வர்றேன்.
[மாலை ரவி கோவிலுக்குள் நுழைகிறான்..சுஜி அவனை நோக்கி வருகிறாள்.]
சுஜி: ஏண்டா முக்கியமான விஷயம்ன்னு சொன்னேன்ல, இவ்வளவு லேட்டா வர்ற ?
ரவி: haloo madam, ஈவினிங் Bangalore trafficல வண்டி ஒட்டி பாக்கணும், சும்மா இங்க உக்காந்துகிட்டு பேச கூடாது.
சுஜி: சரி சண்டைய ஆரம்பிக்காத, வா என்னோட..
சுஜி: ரவி, இது ரமேஷ், என்னோட ஆபீசில வொர்க் பண்றாரு..
ரமேஷ்: ஹாய் ரவி
ரவி: ஹாய் ரமேஷ்
[அப்பொழுது ரமேஷின் அலை பேசி, அழைக்கிறது, ரமேஷ் சற்று தள்ளி சென்றவுடன்]
சுஜி: ரவி, ஆள் எப்படி ?
ரவி: ம்ம்...நல்ல இருக்காரு..ஏன் ?
சுஜி: உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு கோபப்படாத. முதல்ல friend-அ தான் பழகினோம், அப்றம் அவர் சொன்னாரு, நான் கொஞ்ச நாள் யோசிச்சேன், அப்றம் இன்னைக்கி காலைல சரின்னு சொல்லிட்டேன்..முதல்ல உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் உன்னைய வர சொன்னேன்.

ரவி இதை எதிர் பார்க்கவில்லை. உடம்பில் ஒரு உறுப்பை இழந்தது போன்ற ஒரு வலி அவன் மனதில். காரணம் புரியவில்லை, கண்கள் கலங்கின, கால்கள் நடுங்கின. ஒன்றுமே தோன்றாமல் திரும்பி நடந்தான். சுஜி கூப்பிட்டதையும் பொருட்படுத்தாமல் திரும்பிச் சென்றான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது இன்னும் ஆச்சரியம் தான். அலைபேசியை அணைத்து வைத்தான். கண்களை மூடினால், கண்ணீர் கசிந்தது. அவளை இன்று மாலை வரை தோழியாக தானே நினைத்தேன், எனக்குள் ஏன் இந்த சோகம், வலி கண்ணீர் எல்லாம். என்னையும் அறியாமல் என் மனத்தை அவள் எப்படி ஈர்த்தாள்.
அரனுக்காக இல்லாமல் அவளுக்காக அந்த ராத்திரியை சிவராத்திரி ஆக்கினான். தினமும் இனிமையாக விடியும் அந்த காலை பொழுது, அன்று அவனுக்கு கசப்பாக தோன்றியது. இரவின் தூக்கமின்மை கண்களில் தெரிந்தது, வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.

தொடரும் ...
பகுதி V

Sunday, June 10, 2007

சீனி கம் [Cheeni Kum]

Delhi வந்து ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு ஹிந்தி படம் கூட பார்க்கலைன்னா எப்படி?? சரி அப்படின்னு நானும், என்னோட friend ஒருத்தரும் படத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம். எங்க வீட்டுப் பக்கத்துல 4 நாளைக்கு முன்னாடி தான் ஒரு Multiplex open பண்ணி இருந்தாங்க. வெள்ளிக்கிழமை நைட் 10:45 show போனோம். என்ன, என்ன படம் ஓடுது, அப்படின்னு பாத்துக்கிட்டே வந்தோம். என் friend சொன்னாரு, 'சீனி கம்'ன்னு ஒரு படம் review நல்லா போட்டிருந்தாங்கான்ணு சொன்னாரு. O.K. அந்த படத்துக்கே போகலாம்னு டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனோம்.

Theater-க்கு வெளில 3 ஜீப்ல போலீஸ்!!!, என்னடா இது theatre-க்கு யாராவது Bomb வச்சுடாங்களாண்ணு, நாங்க யோசிச்சிகிட்டு உக்காந்திருந்தோம். முந்தின show முடிஞ்சு எல்லாரும் EXIT வழியா வெளில போனாங்க, கொஞ்ச நேரம் கழிச்சு, யாரோ ENTRY வழியா வெளில போனாங்க, யாருன்னு பாத்தா, Delhi Cheif Minister, Sheela Dixit. ஒரு விஷயத்துக்கு அவங்கள கண்டிப்பா பாராட்டியே ஆகணும், ஒரு CM நினைச்சா தனியா ஒரு preview theatre-ல போய் special show பாக்கலாம், இல்ல theatre-ல தான் பார்க்கணும்னா, Gold Class-ல உக்காந்து பார்க்கலாம், ஆனா normal டிக்கெட்-ல எல்லாரோடையும் உக்காந்து படம் பார்க்கிறது எல்லாம், நம்ம ஊருல நினைச்சு பார்க்க முடியுமா ??? O.k. coming to the point.

இந்த பதிவுல நான் படத்தோட கதை சொல்ல போறது இல்லைன்னு நினைச்சு தான் எழுத ஆரம்பிச்சேன், ஆனா கதை சொல்லாம எப்படி படத்த பத்தி எழுதறது ? அதனால படம் பாக்றதுக்கு முன்னாடி கதையோ விமர்சனமோ படிக்கிறது இல்லைன்னு இருக்குறவங்க, இத படிக்க வேண்டாம்ன்ணு கேட்டுக்கிறேன்.

கதை என்னமோ கிட்டதட்ட முதல் மரியாதை கதை மாதிரி தான் [similar not same]. அமிதாப் London-ல ஒரு இந்தியன் Restaurant வச்சிருக்கார், அவரோட style-ல சொல்லணும்னா, [An Authentic Indian Restaurant]. அவர் தான் chef + owner. தபு ஒரு தடவை அந்த hotel-க்கு சாப்பிட வர்றாங்க, அவங்க ஆர்டர் பண்ணின ஹைதாராபாதி புலாவ, ஸ்வீட்டா இருக்குன்னு சொல்லி reject பண்ணிறாங்க. அமிதாப் ரொம்ப டென்ஷன் ஆகி, தபுவ பாத்து வாழ்க்கையில எப்பவாது இந்த புலாவ சாப்பிட்டு இருக்கீங்களான்னு, கேட்டு காய்ச்சி எடுக்குறார். அடுத்த நாள் தபு ஹைதாராபாதி புலாவ செஞ்சு அனுப்புறாங்க.
அமிதாப்க்கு எங்க தப்பு நடந்திருக்குன்னு தெரியுது, தபு கிட்ட sorry கேக்கிறததுக்கு போறார். இப்படியே ஸ்டார்ட் ஆகி, ரெண்டு பேருக்கும் காதல் வந்துடுது..தபு அவங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்க சொல்லுறாங்க..அங்க போனா தபுவோட அப்பா அமிதாப்ப விட 6 வயசு சின்னவர்.. so, அமிதாப் பொண்ணு கேட்டாரா ? அவங்க அப்பா ஒத்துக்கிட்டார ?? வெள்ளித் திரையில் காண்க.
கனமான கதைக் கரு, ஆனாலும் படம் முழுவதிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை பின்னணி தொடர்வது ரசிக்கும்படி இருக்கிறது. பாட்டு எல்லாமே நம்ம பழைய பாட்டோட re-mix தான், ஏன்னா இசை நம்ம இளையராஜா. மௌன ராகம் படத்தோட பின்னணி இசையை அப்படியே use பண்ணி இருக்கார். "சீனி கம்" பாட்டு நல்லா இருக்கு.

Sunday, June 03, 2007

நீ வருவாய் என - III

பகுதி I
பகுதி II
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த நினைவுகள்...
ஒரு அழகிய குளுமையான காலைப் பொழுது, சுஜி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இன்று ஒரு MNCயில், அவளுக்கு இறுதிச் சுற்று, ஏற்கனவே 5 தகுதிச் சுற்றுகள் முடிந்து விட்டன. ஐந்திலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் வெகு சிலர் தான். எப்படியும் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் நேர்முகத்திற்க்கு சென்றாள். வந்திருந்த அனைவருமே ஒருவரை ஒருவர், ஏதோ ஒரு தகுதி சுற்றில் சந்தித்திருந்தனர், அப்படித்தான் ரவியையும் அவள் சந்தித்தாள். சந்தித்திருந்தாலும் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. எதேச்சையாக ரவியின் Bio-Data அவள் கண்ணில் பட்டது. ரவியும் அவளுடைய ஊரைச் சேர்ந்தவன் தான் என்பதைக் கண்டவுடன் ஏதோ ஒரு மகிழ்ச்சி அவள் மனத்தில். உடனே சென்று ரவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இருவருமே நேர்-காணலை சிறப்பாக செய்தனர். இறுதிச் சுற்று முடிந்து அன்றே offer letter தருவதாக சொன்னதால், இருவரும் மாலை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

சுஜி: ரவி, offer letter கிடைச்ச உடனே ஜாயின் பண்ணீடுவீங்களா ?
ரவி: இல்ல சுஜி, ஒரு 10 days டைம் கேப்பேன்
சுஜி: எதுக்கு ?
ரவி: என்னோட Dream Company ஒண்ணுல இன்னும் result சொல்லல, இன்னும் 1 வாரத்துல அதுக்கு result தெரிஞ்சிடும். அந்த offer வந்ததுன்னா, அதத்தான் choose பண்ணுவேன்.
சுஜி: ஓ! All the best
ரவி: Thanks. நீங்க இங்க தான் ஜாயின் பண்ணுவிங்களா ?
சுஜி: ஆமா ரவி, எனக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்..offer வாங்கின அடுத்த நாளே ஜாயின் பண்ணிடுவேன்.
ரவி: ஹ்ம்ம்..
சுஜி: அடுத்து எப்ப ஊருக்குப் போறீங்க ?
ரவி: நம்ம் ஊரு பொங்கலுக்குப் போவேன். நீங்க ?
சுஜி: நானும் போகணும்..நீங்க டிக்கெட் போட்டுட்டீங்களா ?
ரவி: இல்ல, இனிமேல் தான்
சுஜி: நாம சேர்ந்து போலாமே, எனக்கும் சேர்த்து book பண்ணுறீங்களா? உங்களுக்கு ஒண்ணும் problem இல்லையே ?
ரவி: ம்..சரி no problem.

ரவி அவனின் கனவு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான், சுஜியுடனான அவனின் நட்பும் தொடர ஆரம்பித்தது. நீங்கள், நீ ஆனது. வார இறுதி சந்திப்பு மறைந்து, வாரம் முழுவதும் சந்திப்பு தொடர்ந்தது. வாழ்க்கைல புதுசா ஒரு உறவு வரும் போது எல்லாமே நல்லதாகவே நடக்கிற மாதிரி இருக்கும், மனசு எப்போதும் சந்தோஷமா இருக்கும். ரவியும் சுஜியும் அந்த பருவத்தில் தான் இருந்தனர். வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது.

ஆண்-பெண் நட்பில் சலனத்தின் பங்கு மிக முக்கியமானது. சலனம், அது இருவருக்குமே வராமல் இருக்கலாம் அல்லது இருவருக்குமே வரலாம், இந்த இரண்டிலும் அல்லது இந்த இரண்டினாலும் நட்புக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் இருவரில் ஒருவர்க்கு மட்டும் மற்றவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு சிறு சலனமோ, ஈர்ப்போ உருவாகிவிட்டால் அங்கே நட்போ காதலோ மறைய ஆரம்பித்து விடும்.



இந்த நிமிடம் வரை ரவிக்கும் சுஜிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மட்டுமே இருந்து வருகிறது..இப்படியே இருந்திருந்தால், இந்தக் கதையை எழுத அவசியம் இருந்திருக்காது.. இந்த இருவரில் ஒருவர்க்கு மட்டும் அடுத்தவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு வித உணர்வு, மிக ரகசியமாய் வளர்கிறது.. யாருக்கு தோன்றியது ?? இவ்வளவு நாட்கள் தோன்றாத ஒரு விஷயம் இப்போது எப்படி தோன்றியது ?

தொடரும்...

பகுதி IV

Friday, June 01, 2007

நீ வருவாய் என - II

பகுதி I
சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??
சுஜாதா: என்னைய மறந்துட்டில ரவி.

[ரவி அவள் கண்களை பார்த்து மெல்ல சிரித்தான்.

ஆம்
மறந்து தான் போய் விட்டேன்
உன் விழியில் இந்த உலகத்தை
மறந்து தான் போய் விட்டேன்
உன் நினைவில் என் தனிமையை
மறந்து தான் போய் விட்டேன்
உன்னை மறக்க வேண்டும் என்ற மனஉறுதியை

]

சுஜாதா: ஏன் ரவி ஒண்ணுமே பேச மாட்டேங்கற?
[அப்போது ஷீலா திரும்பி வருகிறாள்]
ஷீலா: என்ன ரவி பேச மாட்டேங்கறானா? அவன் எப்பவுமே அப்படி தான். நாங்க இங்க சேர்ந்த நாள்ல இருந்து இவன் என்கிட்ட பேசியதை எல்லாம், ஒரு Bus டிக்கெட் பின்னாடி எழுதிடலாம். ஆனா செம brilliant, நம்ம TL க்கு இவன் தான் வலக்கை. டேய், என்ன முறைக்கிற ?? 'அள்ளக்கை'ன்னா சொன்னேன், வலக்கைன்னு தான சொன்னேன்.
ரவி: எனக்கு இப்ப ஒரு con-call இருக்கு..நாம அப்புறம் பேசலாம்.
ஷீலா: சுஜி, மதியம் லஞ்ச் தனியா சாப்பிட்டு இருந்தீங்க போல?? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, நாளைக்கு எங்களோட ஜாயின் பண்ணிக்கோக்கங்க.
சுஜி: தாங்க்ஸ் ஷீலா..கண்டிப்பா நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.
(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், உண்மைய சொல்லு..உனக்கு சுஜிய, முன்னாடியே தெரியுமா ??
ரவி: தெரியாது ஏன் கேக்குற ?
ஷீலா: இல்ல இன்னைக்கி காலைல கோவிலுக்கு போயிருந்தேன். அப்போ அவ உன் பெயருக்கு அர்ச்சனை பண்ணினா. இன்னைக்கி உனக்கு பிறந்த நாள்ன்னு அவளுக்கு எப்படி தெரியும் ? நம்ம டீம்ல கூட என்னைய தவிர வேற யாருக்கும் தெரியாது.
ஞாபகம் இருக்கா? அன்னைக்கி உன்னோட PAN Card application fill பண்ணினப்போ தான் எனக்கே தெரியும், அப்போ நான் கேக்கும் போது தான் மற்ற details சொன்ன.
ரவி: ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருப்பாங்க.
ஷீலா: ஓ!!! அப்படீங்களா சார்...அப்புறம் அவளுக்கு எப்படி உன்னோட கோத்திரம்,நட்சத்திரம் எல்லாம் தெரியும் ? ஒரு வேளை, அவளுக்கு தெரிஞ்ச ரவிக்கும் உனக்கும் ஒரே நாள், ஒரே கோத்திரம், ஒரே நட்சத்திரமா இருக்கலாம் இல்லையா ? அதான் ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருக்காங்களே இல்லையா ரவி சார் ? அன்னைக்கு சாப்பிடும் போதும் பாத்தேன்...உன்னையவே பாத்துக்கிட்டு இருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு, கண்ணை துடைச்சிக்கிட்டா..
ரவி: நீ உன் வேலைய பாக்க மாட்டியா? யார் என்ன பண்றாங்கன்ணு தான் பார்ப்பியா ? ஒரு வேளை அவளுக்கு கண்ல தூசு பட்டிருக்கும்.
ஷீலா: எனக்கு என்னமோ இன்னும் சந்தேகாமாவே தான் இருக்கு. சரி அதை விடு, என்னைய எங்க treat கூட்டிட்டு போற ?
ரவி: எங்க வேணும்னாலும் போகலாம், இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[ஷீலா செல்கிறாள், ரவியின் மனது அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவனிடம் பதில்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு படித்த ஒரு கவிதை ஏனோ தேவை இல்லாமல், அவன் நினைவுக்கு வந்தது

என் பிறந்த நாளில்
நீ என் பெயரில் செய்த அர்ச்னையால்
எனக்கும் கடவுளுக்கும் சண்டை,
தினமும்
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் நீ
இன்று என் பெயரில் செய்ததால்
கடவுளுக்கு என் மீது கோபம்
அவருடைய தேவதைகளில் ஒன்றை
நான் அபகரித்துவிட்டேன் என்று.



யாரோ வரும் சத்தம் கேட்டு அவன் நினைவுகள் கலைகின்றன.]

இடம்: Office Cafeteria
பாத்திரங்கள்: சுஜி, ஷீலா மற்றும் Bench மக்கள்
ஷீலா: உன்னைய இன்னைக்கி காலைல கோவில்ல பாத்தேன், சாமி கிட்ட ஏதோ application போட்டுக்கிட்டு இருந்த?
சுஜி: நான் தினமும் கோவிலுக்கு போவேன்
ஷீலா: ஓ! அப்படியா...சரி இந்த வீக்கெண்ட் ப்ளான் என்ன உனக்கு ?
சுஜி: பெருசா ஒண்ணும் இல்ல, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் நீ என்ன பண்ண போற ?
ஷீலா: ரவியோட வெளில போகலாம்னு இருக்கேன்.
சுஜி: ஓ!, சரி ஷீலா, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நாம அப்புறம் மீட் பண்ணலாம்.

ரவி ஷீலாவை அழைத்துச் செல்கிறான் என்று கேட்டவுடன், ஏனோ சுஜியின் மனதில் ஒரு சிறிய வலி அவள் கண்கள் கலங்கின. ஏன் எங்கள் உறவில் இப்படி ஒரு விரிசல்? என்று அவள் மனம் யோசிக்க தொடங்கியது.
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த பொழுது....

தொடரும்.....
பகுதி III

Thursday, May 31, 2007

நீ வருவாய் என - I

ஷீலா: என்ன கண்ணா, உன்னைய Blue cross members , ஆந்திரா சினிமா P.R.Os, எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, நீ silent-ஆ இங்க உக்காந்திருக்க ?
ரவி: என்னையவா?? எதுக்கு ??

ஷீலா: உன்னோட சட்டை கலர் பாத்து, 4 மாடுகளுக்கு கண்ணு தெரியலையாம், அதான் Blue cross members உன்மேல் case போட்றதுக்காக தேடிகிட்டு இருக்காங்க.
இந்த மாதிரி கலர் combinationல dress design பண்றதுக்கு, ஆந்திராவுல யாருமே இல்லையாம், அதான் Interview கூட வைக்காம உனக்கு offer தர்றதுக்காக எல்லாரும் வெளில waiting.
ஏண்டா இப்படி அடிக்கிற கலர்ல dress பண்ணுற, கொஞ்சம் pleasant-ஆ dress பண்ணலாம்ல ?
ரவி: எல்லாம் எங்களுக்கு தெரியும்..நீ போய் உன் வேலைய பாரு.
ஷீலா: உன்னைய எல்லாம்ம்ம், என்ன சொல்லுறதுன்னே தெரியல. எப்படியோ ஒழி.

(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், call பண்ணினா, attend பண்ண மாட்டியா ??
ரவி: எப்ப call பண்ணின? எனக்கு missed call கூட வரல
ஷீலா: உன் டப்பா 'செல்'ல தூக்கி சாம்பார்ல போடு. ஏண்டா நானும் எவ்வளவு நாளா சொல்றேன், வேற ஒரு நல்ல mobile வாங்குன்னு.
ரவி: ஏன் இந்த போனுக்கு என்ன ? அப்பப்ப switch-off ஆகிடும், அவ்வளவு தான். இது போதும் எனக்கு.
ஷீலா: உனக்கு போதும்டா. நீயா உனக்கு call பண்ண போற ? நாங்க தான பண்ணனும்.
ரவி: நான் உன்னைய call பண்ண சொன்னேனா ?
ஷீலா: ஏண்டா இப்படி இருக்க ? நல்லா dress பண்ண மாட்டேங்கற, நல்ல phone வாங்க மாட்டேங்கற...எப்பவுமே இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சிய வச்சிருக்க ? என்னாச்சு ?
ரவி: இப்ப உனக்கு என்ன வேணும் ? வேலை இல்லைனா வீட்டுக்கு போ....ஏன் சும்மா வந்து என்னைய torture பண்ணுற ??
ஷீலா: ஹ்ம்ம்..எல்லாம் நேரக் கொடுமை. நான் போறேன்..நீ இந்த laptop-ஆ கட்டி அழு..bye.

[காலசக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கலாம்....ரவியும், ஷீலாவும், அந்த MNC வாயிலில் ஒரே நாள் கால் பதித்தவர்கள். இயல்பில் ரவி தனிமை விரும்பி...ஷீலா அவனுக்கு நேர்-எதிர். அவளுக்கு எப்போதும், அவளை சுற்றி நண்பர்கள் வேண்டும் குணத்தில் இரு துருவங்களாக இருந்த போதிலும், எப்படியோ இருவரும் நண்பர்களாகி விட்டனர் இல்லை, ஷீலா அவனை நண்பனாக்கி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.]

ஷீலா: ரவி, நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்குற பொண்ணு பாத்தியா ?
ரவி: இல்லை.
ஷீலா: நம்ம சர்மாவும், செந்திலும், ஒண்ணு அவ பக்கத்துல இருக்காங்க, இல்ல அவ இருக்குற பக்கம் பாத்துக்கிட்டு இருக்காங்க.
ரவி: சரி
ஷீலா: [கோபத்துடன்] உன்கிட்ட சொன்னததுக்கு, அந்த சுவத்துக்கிட்ட சொல்லிருக்கலாம்..ஹும்ம்.. ஏன் ரவி, நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா ??
ரவி: இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[அப்போது அந்த புதுப் பெண் வருகிறாள்]
ஷீலா: ஹாய்...நான் ஷீலா, இது ரவி
ரவி: ஹாய்.
xyz: ஹாய்...என் பேரு சுஜாதா...நேத்து தான் ஜாயின் பண்ணினேன். Induction இருந்ததுனால நேத்து பேச முடியல.
ஷீலா: அதனால என்ன இனிமேல் இங்க தான இருக்க போறோம், பேசிக்கிட்டே இருக்கலாம்.
[அப்போது ஷீலாவின் கைபேசி அழைக்கிறது..அவள் வெளியே செல்கிறாள்.]

சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??

தொடரும்...

பகுதி II

Sunday, May 27, 2007

Love

Everything I've done, I've done
Only for your love.
Everything I am, I am
In hopes your heart will move.

I know that you love someone else,
But while you're away,
I'll love you just as though our love
Would last till you are grey.

Till you and I are grey, my love,
And all our days are done,
I'll love you just as I do now;
Your heart's my only home.

Monday, May 21, 2007

தண்ணீர் !!! தண்ணீர் !!!

இந்த போஸ்ட் நம்ம ஊரு தண்ணீர் பஞ்சம் பத்தி இல்லைங்க. அறியாத வயசுல அனுபவிச்ச ஒரு ஆனந்த இம்சை...அப்போ அது இம்சையா இருந்தது, இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பா வருது.

அப்போ நாங்க 11th படிச்சிட்டு இருந்தோம், எங்க class-ல ரொம்ப பேரு மதிய சாப்பாடு, கொண்டு வந்திருவாங்க, சில பேரு lunch time-ல வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவாங்க. அப்படி சாப்பாடு கொண்டு வர்ற சில பேரோட தண்ணீர் bottle-ல அவங்களுக்கு தெரியாமல் எடுத்து வச்சுக்குவோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த தண்ணீர் bottle பையன்கிட்ட போய் ஒருத்தன் உட்காருவான், கொஞ்ச நேரம் அவனோட ஏதாவது பேசிட்டே இருப்பான், அப்புறம் ஒரு 2 or 3 mins-ல திரும்பி வந்திருவான்.

இவன் திரும்பி வந்த உடனே அந்த தண்ணீர் bottle பையன், திடீர்னு எழுந்திரிப்பான், பக்கத்துல வந்து பேசிட்டு போன அவன கொலை வெறியோடு பார்ப்பான், வேகமா வெளில போய் நல்ல வெயில் அடிக்கிற இடமா பாத்து உட்காருவான் ஒரு 5 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து,பக்கத்துல வந்து பேசிட்டு போன பையனோட சண்டைய போடுவான்.

விஷயம் என்னன்னா, இந்த பசங்க அவனோட தண்ணீர் bottle-ல இருந்து கொஞ்சம் தண்ணிய அந்த bottle மூடில எடுத்துட்டு போய், அவனோட back-ல ஊத்திட்டு வந்திருவான், கொஞ்ச நேரத்துல அவனோட pant back-ல ஒரு பெரிய water-mark[;)]- இருக்கும். அவன் வேகமா வெளில போய், அத வெயில்ல காய வச்சுட்டு வருவாங்க, especially, நல்ல வெயில் அடிக்கிற சிமெண்ட் தரைல போய் ஒரு 3 நிமிஷம் உட்காந்திட்டு வருவான்.இதுக்கு அப்புறம், எங்க எப்ப, யார் பக்கத்துல வந்தாலும், எல்லாரும் முதல்ல அவன் கைல water bottle மூடி இருக்கான்னு தான் பார்ப்பாங்க. நம்ம பசங்க அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க.

ஒரு சின்ன ப்ளாஸ்டிக் tube, இந்த வீட்டில எலெக்ட்டிரிக் wire எல்லாம் ஒரு வெள்ளை கலர் tube வழியா connect பண்ணுவாங்கல்ல..அந்த tube-அ, எடுத்துட்டு வந்துடாங்க. இப்ப எப்படின்னா, யார் back-ல தண்ணீ ஊற்றணுமோ, அவனுக்கு பின்னாடி இருக்குற பெஞ்சில போய் உக்காந்துக்கிட்டு, அந்த சின்ன tube-அ, அவனுக்கு பின்னாடி அவன் மேல படாம, அவனோட பெஞ்சில வச்சு, அந்த tube-க்குள்ள, தண்ணீ ஊத்திருவாங்க, again the result will be same, திரும்பவும் அவன் சிமெண்ட் தரையை தேடி ஓடுவான்.

ஹ்ம்ம், அது ஒரு அழகிய நிலா காலம்.

Tuesday, May 15, 2007

என் சோக கதையை கேளு Blog குலமே

இந்திய மண்ணுல கால் வச்சதும், அப்படியே மெய் சிலிர்த்து போச்சி ( டேய், போதும் அடங்குன்னு நீங்க சொல்றது கேக்குது), matter என்னன்னா, Onsite-ல இருந்து வந்தா, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு ஆணி கிடையாது. ஏன்னா off-shore-ல எல்லாருமே வெட்டியா தான் இருக்கோம், அப்படின்னு எங்க offshore நண்பர்கள் சொன்னத நம்பி, நானும் சந்தோஷமா வந்தேன்.

நண்பர்கள் சொன்ன மாதிரியே, வந்ததும் ஆபீசில ஒரு வேலையும் இல்ல. இந்த 4.5 வருட Software Engineer வாழ்க்கைல முதல் முறையாக, BENCH ல இருந்தேன், ஆகா!!! என்ன சுகம் ! என்ன சுகம்!.. சரி இப்படி Bench ல இருக்கும் போதே, நம்முடைய சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேற்றிடலாம், அப்படின்னு, முதல் வேலையா, போய் ஒரு Basket Ball, வாங்கிட்டு வந்தேன். Daily காலைல நானும் என்னோட room-mate-um, எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஒரு Basket-Ball court-ல போய் விளையாடலாம்ன்ணு ப்ளான் போட்டோம். அடுத்த நாள் காலைல 6:30 மணிக்கு போய் வெற்றிகரமா எங்களோட practice-a ஆரம்பிச்சோம். ஒரு 7:15 வரைக்கும் விளையாடி களைச்சு, வீட்டுக்கு போறப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அதே சந்தோஷத்தோட, office போனேன். வழக்கம் போல lunch வரைக்கும் ஜாலியா gmail,cricinfo, அப்படின்னு சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க தலைவர் கூப்பிட்டு, ஒரு phone-call attend பண்ண சொன்னாரு..யாரோ technical-அ, என்ன என்னமோ கேட்டாங்க, நானும் சும்மா ஜாலியா பதில் சொன்னேன். சாயங்காலம் எங்க தலை என்னய கூப்பிட்டு, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு Gurgaon ல வேலை இருக்கு, நீ அங்க போ ராசா ன்னு, சொன்னாரு. எனக்கு ஒரே ஷாக்!!! என் கனவு எல்லாம், ஒரு நிமிஷத்துல அப்படியே கலான்சு போச்சு :(. எப்படியோ அவரை சமாளிச்சு, ஒரு நாலு நாள், எங்க ஊருக்கு போய், திருவிழா பாத்துட்டு, exhibition போய்ட்டு[I will put a separate post on my trip to Sivakasi].

ஊர விட்டு வர மனசே இல்லாம, மதுரைல இருந்து Delhi-க்கு வந்தேன். இன்னும் 2 மாசத்துக்கு இங்க தான் குப்பை கொட்ட போறேன் :(. இப்படியாக நான் ஒரு Michael Jordan ஆக உருவாகுவதை இந்த சமுதாயம் தடுத்து என் கனவுக் கோட்டையை இடித்து விட்டது :(

காதல் மலர்


நீ என்னை காதலிக்கலாம்,
என்னால் உன்னை காதலிக்க முடியாது
என்றாய்.

கண்மணியே,
மலரும் எல்லா மலருமே
வண்டிற்காக தான் காத்திருக்கிறது

ஆனால்,
எல்லா மலருக்கும்
வண்டின் ஸ்பரிசம் கிடைப்பதில்லை

அதற்காக,
மலர்கள் வாடுவதில்லை,
இறுதி வரை வண்டிற்காகவே வாழ்ந்து மறைகிறது.

என் காதலும், ஒரு மலர் தான்
வண்டாக நீ வந்தாலும் இல்லையென்றாலும்,
என் காதல் மலர் இறுதி வரை
உனக்காகவே தான் மலர்ந்து,
மணம் வீசிகொண்டிருக்கும்.

Thursday, April 12, 2007

முதல் 'குடி' மகன்

வாழ்க்கைல, நான் இது வரைக்கும் பண்ணாத ஒரு விஷயத்தை நேற்று பண்ணினேன். நேற்று ஒரு promotion பார்ட்டிக்கு போனேன். Korean பார்ட்டினா கண்டிப்பா அங்க drinks இருக்கும். இந்த 6 மாசத்துல 4,5 பார்ட்டிக்கு போய் இருக்கேன். எப்பவுமே எல்லாரும் drinks சாப்பிட சொல்லுவாங்க, நான் "நைசா பேசி எப்படியாவது escape ஆகிடுவேன்". நேற்று யார் கண்ணு பட்டுச்சோன்னு தெரியல, எங்க lead பக்கத்துல உக்கார வேண்டிய நிலமை, ஆரம்பத்துல ஒரு பிரச்சனையும் இல்ல, அவங்க Soju [Korea நாட்டு சரக்கு] குடிச்சிக்கிட்டு இருந்தாங்க, நான் coke குடிச்சிக்கிட்டு இருந்தேன், ஒரு 25 mins-க்கு அப்புறம், மெதுவா ஆரம்பிச்சாங்க:

Lead : நீ ஏன் குடிக்க மாட்டேன்னு சொல்ற?
நான் : எனக்கு பழக்கம் இல்ல.
Lead : ஓ ஹோ !!! இந்தியால யாருமே குடிக்க மாட்டாங்களா ?
நான் : அப்படி எல்லாம் இல்ல. சில பேரு குடிப்பாங்க.
Lead : உங்க ஊரு பார்ட்டில என்ன drinks இருக்குமா ?
நான் : இருக்கும். [என்னாது இந்த lady-க்கு போதை ஏரிருக்சா???]
Lead : அப்படினா, நீ அங்க குடிப்பியா ?
நான் : இல்ல, அங்கயும் குடிக்க மாட்டேன்.
Lead : பொய் சொல்லாத
நான் : நிஜமா, நான் அங்கயும் குடிக்க மாட்டேன்.
Lead : பரவாயில்லை, இங்க எனக்காக ஒரு தடவை குடி.
நான் : இல்ல வேண்டாம் எனக்கு
(அந்த gap ல ஒரு glass-ல Soju வ, ஊத்தி, என்னோட lead, என் முன்னாடி வச்சாங்க)
Lead : இப்ப இதை நீ குடிக்கலைன்னா, என்னையும், Koreaவையும், insult பண்ற மாதிரி
நான் : :( :( :(
[திடீர்னு அந்த table ல இருந்த 50 பேரும் கை தட்டி உற்சாக படுத்துராங்க
லேட் : ம்ம்...குடி
நான் : இல்ல வேண்டாமே..
Lead : அப்ப எங்கள insult பண்ணுரியா ??
நான் : !@#!@#$~

அப்படியே அந்த glass எடுத்து, மூக்க பிடிச்சிக்கிட்டு குடிச்சேன் [luckily அது ரொம்ப சின்ன glass]. ஒரே கசப்பு, வாந்தி வர்ற மாதிரி ஒரு feeling..பக்கத்துல இருந்த coke-அ , எடுத்து புல்ல-அ காலி பண்ணினேன்.

நல்ல இருங்கடா, நல்ல இருங்க, ஒரு நல்ல பையன, இப்படி பண்ணிட்ங்களேன்னு சொல்லிட்டு..வீட்டுக்கு வந்தேன்.நானும் போதை ஏறும் ஏறும் ன்னு, ரொம்ப நேரம் Wait பண்ணி பாத்தேன் ஒண்ணும் ஏறல ... :(அப்புறம் குப்புற படுத்து தூங்கிட்டேன்.
[ஏன்னா நம்ம ஊருல quarter அடிச்சா குப்புற தான படுக்கணும் ;)]

இதுதாங்க என்னோட முதல் அனுபவம். இன்று முதல் நான் ஒரு 'குடி' மகன் ;)

Wednesday, April 11, 2007

சில்லென்று Seoul பயணம் II

Oru vazhiya Hotel-kku vanthu senthathukku apram, nama vanthu senthutom nnu amma-kku sollalam nu patha, naan entha calling card-um vangala...appa thaan Yahoo la irunthu call pannalamnu pathen...sari try panni pakkalamennu oru 10 US $ kku (re)charge panni call panninen...nalla pesa mudinchathu...so athula irunthu ippa varaikkum yahoo thaan use pannren[naan Yahoo kku Advertisement pannalainga ;)].

Seoul-kkum India-kkum 3.5 hours difference, Seoul is ahead.[Chumma oru FYI, Yethavathu urupadiya oru vishayam sollanumla, athukku thaan :D].

Ok,coming back to the point, Hotel-kku vantha udane, ennoda office colleagues,koncha peru antha hotel-la thangi irunthanga, they ordered the Indian food for me too.. so nalla saptutu thoonginen..Adutha naal office kku kootitu ponnanga, enna kodumai na, office la yum yarum English la pesa mattengranga :(..they speak/write/read only korean, even the technical things, nama yethavathu pesinomna, romba kashtapatu english pesuvanga..ithu aavrathu illa nnu, naan ellaraiyum patha smile pannrathoda niruthikkuven..

Weekend velila pogalamnu, ennaya oru place-kku kootitu ponnanga, antha place kku peru YongSan, E-Market anga irukkunnu sonnanga.. Poi pathenga, namma oorla kaikari kadaila vachrukka mathiri, Camera, MP3/4 player,iPOD,laptop,mobile,Camcorder,...etc intha mathiri ella digital items-um paranthu virinja oru 5 floor la, vachrunthanga, atha pathuttu varrathukke oru 4 hrs aagum...anga poi pattikaatan mittaikadaiya patha mathiri, ellathaiyum pathutu vanthen.

Next weekend, Lotte World Magic Island nnu oru placekku ponom, it was amazing, namma ooru theme park thaan, but Shankar padam mathiri romba Birammandama irunthathu. Keela irukkura pics are some of the pics taken in LotteWorld.




ippadiye ovvoru weekend-um yethavathu oru place-kku povom..Ippadi thaan oru weekend, Seoul National park poirunthom, romba nalla irunthathu, kurippitu sollanumna, anga nadantha Dolphin & Seal show-va rombave enjoy panninom..ungal paarvaikku sila pugaipadangal ithooooo...





Ippadiye, Seoul-la irukkura ella tourist spot-ayum pathachu...[sari,sari poi office-la vela pathiya, illa oor suthiniya nnu thana kekkuringa,puriyuthu ;)] Ippadiyaga ennudaya Seoul payanam innum 10 naatkalil mudivadaiya ullathu. Ama, naan Apr 21st India kku thirumba poren. Ippave plan panniten, India vantha udane enna enna sappidanamnu [nijama nga, nalla sappadu saptu romba naal aachi :(]

Tuesday, April 03, 2007

BalleLakka: Shivaji, The Boss



Once the news came regarding, 'Shivaji' Audio release, I just thought of previous Audio releases of Super Star movies. When I was in India, always get the Audio Casette on the first day of the Song release, but now I'm in Korea :(. This time I heard the songs in online..Hearing those songs itself, ensures the movie will be a big hit. The songs are addictive, especially the intro song, BalleLakka, man..too good. SPB rocked..I donno, if I'll hear the same song with the same enthu, if and all its not a Rajni film.[may becoz I'm crazy about Super Star!!!]. Hearing those songs increased the anxiety of the movie release, And some of the stills I saw was amazing..I put a few here.


East or West...Super Star is Best :-)

Saturday, March 31, 2007

சில்லென்று Seoul பயணம் I

Pona varusham October maasam Bangalore kku vanthu, ennoda puthu company la join panninen.Hyderabad la irunthu Bangalore kku vanthathukku oru mukkiyamana reason, Friends and Maasathukku oru thadavaiyavathu oorukku poi amma,appa voda irunthutu varalam appadinrathu thaan. Company la join pannina 4th day, Korea kku kilamba sonnanga, naan ithu varaikkum Korea-va map la kooda pathathu kidayathu. Kan moodi kan thirakkangullaeyum, Visa,Tickets,insurance nnu enna ennamo kaila koduthu poitu vaa raasa nnu sollitanga. Enga amma-vum, paiyan muthal muthal-a foreign poranennu 1 nalaikku munnadiye Bangalore vanthu, pack panni ellathaiyum ready-a vachutanga.Enga ammakku naan flight la yerratha pakkanumnu romba aasai,but airport vantha apram thaan theriyum, immigration pora varaikkum thaan ennaya pakka mudiyumnu.


enga amma enmela ulla paasatha appadiye naan kondu pora luggage la kaatitanga...Airport-la poi patha, overweight !!![:(]. Eppadiyo samalichu amma appaku tata kamichittu, appadiye flight la ukkanthen..Transfer,Transit nnu enna ennamo sonnainga...ellam mudichittu oru vazhiya Inchenon Airport la irakki vittainga...nanum customs,immigration ellam mudichittu, luggage eduthuttu velila vanthutten.Korea la yarukkum English pesa varathu..ennaya receive pannavum yarum kidayathu...Korea la irunthu oru korean mail pannirunthan, Airport la irunthu oru bus number solli antha bus-la yeri, young-deung-po nnu oru idathula irangi, anga irunthu taxi pidichu Yang-pyeong nnu oru idathula irukka hotel kku poganumnu antha mail-la irunthuchi.


Mail annupina antha maharasan urupadiya pannina ore kaariyam, antha mail-la english la yum, korean la yum, athe message-a ezhuthirunthan..Antha mail printout-a vachukittu eppadiyo antha bus nikkra edatha kandupidichu anga pona, antha bus driver-a patha, yetho Titanic Kappal-oda captain mathiri, Teek-a dress pannitu, thoppi ellam vachrunthar, aana manushan english theriyathu nnu sollitar, naanum mathavanga kitta kamicha mathiri antha mail-a eduthu kamichen, avarum sirichikittae, luggage-a eduthu bus vaithukkula pottutu, ennaya kootitu poi oru seat la ukkara vachar. Bus poguthu poguthu poikittae irukku..oru 50 mins apram, antha driver vanthu iranga sonnaru..ennodave irangi luggage eduthu oru taxi-a koopitu, luggage ellam antha taxi la vachutu, ponaru..naan thanks nu sonnen, athu avarukku purinchatha ennanu kooda theriyathu...Oru vishayam ennana, naan patha varaikkum Korean makkal ellarum romba humble, polite and helpful... Antha taxi driver-um yaar yaaruko phone panni, hotel-a visarichu ennaya kondu vanthu setthutaru..eppadiyo hotel-kku vanthu ennoda room la settle aaiten...


Continue in Part II

Thursday, March 29, 2007

Missing You

Heart treats, you are there
Brain knows, you are gone
Me in between, with lot of pain
All my efforts, went in vain

Never again feel your touch
Never again feel the warmth
Never again those honeyed words.
Never again Happiness in my life.

Missing You Badly !!!

Me Starting Again

Neraya Blog padikka aarambichathula irunthu, namamlum intha mathiri ezhuthuna enna nnu, oru aarva kolaru la, pona varusham intha blog-a aarambichen..Aarambicha sambirathayathukkaga, ore oru post, ennoda trip to Sivakasi from Hyd-a pathi ezhuthinen.. avvalavu thaan athukku apram lot changes. Moved out of Hyd to Bangalore, apram moved to Korea, staying in seoul for the past 6 months. Enakku intha kavithai, kathai ellam ezhutha theriyathu, aana inga enna nadakuthu nnu appo appo ezhuthuren..I hope to write continuously..so pakkalam.