Tuesday, May 15, 2007

காதல் மலர்


நீ என்னை காதலிக்கலாம்,
என்னால் உன்னை காதலிக்க முடியாது
என்றாய்.

கண்மணியே,
மலரும் எல்லா மலருமே
வண்டிற்காக தான் காத்திருக்கிறது

ஆனால்,
எல்லா மலருக்கும்
வண்டின் ஸ்பரிசம் கிடைப்பதில்லை

அதற்காக,
மலர்கள் வாடுவதில்லை,
இறுதி வரை வண்டிற்காகவே வாழ்ந்து மறைகிறது.

என் காதலும், ஒரு மலர் தான்
வண்டாக நீ வந்தாலும் இல்லையென்றாலும்,
என் காதல் மலர் இறுதி வரை
உனக்காகவே தான் மலர்ந்து,
மணம் வீசிகொண்டிருக்கும்.

No comments: