ஷீலா: என்ன கண்ணா, உன்னைய Blue cross members , ஆந்திரா சினிமா P.R.Os, எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, நீ silent-ஆ இங்க உக்காந்திருக்க ?
ரவி: என்னையவா?? எதுக்கு ??
ஷீலா: உன்னோட சட்டை கலர் பாத்து, 4 மாடுகளுக்கு கண்ணு தெரியலையாம், அதான் Blue cross members உன்மேல் case போட்றதுக்காக தேடிகிட்டு இருக்காங்க.
இந்த மாதிரி கலர் combinationல dress design பண்றதுக்கு, ஆந்திராவுல யாருமே இல்லையாம், அதான் Interview கூட வைக்காம உனக்கு offer தர்றதுக்காக எல்லாரும் வெளில waiting.
ஏண்டா இப்படி அடிக்கிற கலர்ல dress பண்ணுற, கொஞ்சம் pleasant-ஆ dress பண்ணலாம்ல ?
ரவி: எல்லாம் எங்களுக்கு தெரியும்..நீ போய் உன் வேலைய பாரு.
ஷீலா: உன்னைய எல்லாம்ம்ம், என்ன சொல்லுறதுன்னே தெரியல. எப்படியோ ஒழி.
(சில நாட்களுக்குப் பிறகு....)
ஷீலா: டேய், call பண்ணினா, attend பண்ண மாட்டியா ??
ரவி: எப்ப call பண்ணின? எனக்கு missed call கூட வரல
ஷீலா: உன் டப்பா 'செல்'ல தூக்கி சாம்பார்ல போடு. ஏண்டா நானும் எவ்வளவு நாளா சொல்றேன், வேற ஒரு நல்ல mobile வாங்குன்னு.
ரவி: ஏன் இந்த போனுக்கு என்ன ? அப்பப்ப switch-off ஆகிடும், அவ்வளவு தான். இது போதும் எனக்கு.
ஷீலா: உனக்கு போதும்டா. நீயா உனக்கு call பண்ண போற ? நாங்க தான பண்ணனும்.
ரவி: நான் உன்னைய call பண்ண சொன்னேனா ?
ஷீலா: ஏண்டா இப்படி இருக்க ? நல்லா dress பண்ண மாட்டேங்கற, நல்ல phone வாங்க மாட்டேங்கற...எப்பவுமே இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சிய வச்சிருக்க ? என்னாச்சு ?
ரவி: இப்ப உனக்கு என்ன வேணும் ? வேலை இல்லைனா வீட்டுக்கு போ....ஏன் சும்மா வந்து என்னைய torture பண்ணுற ??
ஷீலா: ஹ்ம்ம்..எல்லாம் நேரக் கொடுமை. நான் போறேன்..நீ இந்த laptop-ஆ கட்டி அழு..bye.
[காலசக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கலாம்....ரவியும், ஷீலாவும், அந்த MNC வாயிலில் ஒரே நாள் கால் பதித்தவர்கள். இயல்பில் ரவி தனிமை விரும்பி...ஷீலா அவனுக்கு நேர்-எதிர். அவளுக்கு எப்போதும், அவளை சுற்றி நண்பர்கள் வேண்டும் குணத்தில் இரு துருவங்களாக இருந்த போதிலும், எப்படியோ இருவரும் நண்பர்களாகி விட்டனர் இல்லை, ஷீலா அவனை நண்பனாக்கி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.]
ஷீலா: ரவி, நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்குற பொண்ணு பாத்தியா ?
ரவி: இல்லை.
ஷீலா: நம்ம சர்மாவும், செந்திலும், ஒண்ணு அவ பக்கத்துல இருக்காங்க, இல்ல அவ இருக்குற பக்கம் பாத்துக்கிட்டு இருக்காங்க.
ரவி: சரி
ஷீலா: [கோபத்துடன்] உன்கிட்ட சொன்னததுக்கு, அந்த சுவத்துக்கிட்ட சொல்லிருக்கலாம்..ஹும்ம்.. ஏன் ரவி, நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா ??
ரவி: இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[அப்போது அந்த புதுப் பெண் வருகிறாள்]
ஷீலா: ஹாய்...நான் ஷீலா, இது ரவி
ரவி: ஹாய்.
xyz: ஹாய்...என் பேரு சுஜாதா...நேத்து தான் ஜாயின் பண்ணினேன். Induction இருந்ததுனால நேத்து பேச முடியல.
ஷீலா: அதனால என்ன இனிமேல் இங்க தான இருக்க போறோம், பேசிக்கிட்டே இருக்கலாம்.
[அப்போது ஷீலாவின் கைபேசி அழைக்கிறது..அவள் வெளியே செல்கிறாள்.]
சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??
தொடரும்...
பகுதி II
2 comments:
கதை அருமையான அரம்பம் குணா. அமர்க்களப்படுத்து.
//கொழுப்பு said...
கதை அருமையான அரம்பம் குணா. அமர்க்களப்படுத்து. //
நன்றி நண்பா ..
Post a Comment