Monday, May 21, 2007

தண்ணீர் !!! தண்ணீர் !!!

இந்த போஸ்ட் நம்ம ஊரு தண்ணீர் பஞ்சம் பத்தி இல்லைங்க. அறியாத வயசுல அனுபவிச்ச ஒரு ஆனந்த இம்சை...அப்போ அது இம்சையா இருந்தது, இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பா வருது.

அப்போ நாங்க 11th படிச்சிட்டு இருந்தோம், எங்க class-ல ரொம்ப பேரு மதிய சாப்பாடு, கொண்டு வந்திருவாங்க, சில பேரு lunch time-ல வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவாங்க. அப்படி சாப்பாடு கொண்டு வர்ற சில பேரோட தண்ணீர் bottle-ல அவங்களுக்கு தெரியாமல் எடுத்து வச்சுக்குவோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த தண்ணீர் bottle பையன்கிட்ட போய் ஒருத்தன் உட்காருவான், கொஞ்ச நேரம் அவனோட ஏதாவது பேசிட்டே இருப்பான், அப்புறம் ஒரு 2 or 3 mins-ல திரும்பி வந்திருவான்.

இவன் திரும்பி வந்த உடனே அந்த தண்ணீர் bottle பையன், திடீர்னு எழுந்திரிப்பான், பக்கத்துல வந்து பேசிட்டு போன அவன கொலை வெறியோடு பார்ப்பான், வேகமா வெளில போய் நல்ல வெயில் அடிக்கிற இடமா பாத்து உட்காருவான் ஒரு 5 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து,பக்கத்துல வந்து பேசிட்டு போன பையனோட சண்டைய போடுவான்.

விஷயம் என்னன்னா, இந்த பசங்க அவனோட தண்ணீர் bottle-ல இருந்து கொஞ்சம் தண்ணிய அந்த bottle மூடில எடுத்துட்டு போய், அவனோட back-ல ஊத்திட்டு வந்திருவான், கொஞ்ச நேரத்துல அவனோட pant back-ல ஒரு பெரிய water-mark[;)]- இருக்கும். அவன் வேகமா வெளில போய், அத வெயில்ல காய வச்சுட்டு வருவாங்க, especially, நல்ல வெயில் அடிக்கிற சிமெண்ட் தரைல போய் ஒரு 3 நிமிஷம் உட்காந்திட்டு வருவான்.இதுக்கு அப்புறம், எங்க எப்ப, யார் பக்கத்துல வந்தாலும், எல்லாரும் முதல்ல அவன் கைல water bottle மூடி இருக்கான்னு தான் பார்ப்பாங்க. நம்ம பசங்க அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க.

ஒரு சின்ன ப்ளாஸ்டிக் tube, இந்த வீட்டில எலெக்ட்டிரிக் wire எல்லாம் ஒரு வெள்ளை கலர் tube வழியா connect பண்ணுவாங்கல்ல..அந்த tube-அ, எடுத்துட்டு வந்துடாங்க. இப்ப எப்படின்னா, யார் back-ல தண்ணீ ஊற்றணுமோ, அவனுக்கு பின்னாடி இருக்குற பெஞ்சில போய் உக்காந்துக்கிட்டு, அந்த சின்ன tube-அ, அவனுக்கு பின்னாடி அவன் மேல படாம, அவனோட பெஞ்சில வச்சு, அந்த tube-க்குள்ள, தண்ணீ ஊத்திருவாங்க, again the result will be same, திரும்பவும் அவன் சிமெண்ட் தரையை தேடி ஓடுவான்.

ஹ்ம்ம், அது ஒரு அழகிய நிலா காலம்.

No comments: