Friday, June 01, 2007

நீ வருவாய் என - II

பகுதி I
சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??
சுஜாதா: என்னைய மறந்துட்டில ரவி.

[ரவி அவள் கண்களை பார்த்து மெல்ல சிரித்தான்.

ஆம்
மறந்து தான் போய் விட்டேன்
உன் விழியில் இந்த உலகத்தை
மறந்து தான் போய் விட்டேன்
உன் நினைவில் என் தனிமையை
மறந்து தான் போய் விட்டேன்
உன்னை மறக்க வேண்டும் என்ற மனஉறுதியை

]

சுஜாதா: ஏன் ரவி ஒண்ணுமே பேச மாட்டேங்கற?
[அப்போது ஷீலா திரும்பி வருகிறாள்]
ஷீலா: என்ன ரவி பேச மாட்டேங்கறானா? அவன் எப்பவுமே அப்படி தான். நாங்க இங்க சேர்ந்த நாள்ல இருந்து இவன் என்கிட்ட பேசியதை எல்லாம், ஒரு Bus டிக்கெட் பின்னாடி எழுதிடலாம். ஆனா செம brilliant, நம்ம TL க்கு இவன் தான் வலக்கை. டேய், என்ன முறைக்கிற ?? 'அள்ளக்கை'ன்னா சொன்னேன், வலக்கைன்னு தான சொன்னேன்.
ரவி: எனக்கு இப்ப ஒரு con-call இருக்கு..நாம அப்புறம் பேசலாம்.
ஷீலா: சுஜி, மதியம் லஞ்ச் தனியா சாப்பிட்டு இருந்தீங்க போல?? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, நாளைக்கு எங்களோட ஜாயின் பண்ணிக்கோக்கங்க.
சுஜி: தாங்க்ஸ் ஷீலா..கண்டிப்பா நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.
(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், உண்மைய சொல்லு..உனக்கு சுஜிய, முன்னாடியே தெரியுமா ??
ரவி: தெரியாது ஏன் கேக்குற ?
ஷீலா: இல்ல இன்னைக்கி காலைல கோவிலுக்கு போயிருந்தேன். அப்போ அவ உன் பெயருக்கு அர்ச்சனை பண்ணினா. இன்னைக்கி உனக்கு பிறந்த நாள்ன்னு அவளுக்கு எப்படி தெரியும் ? நம்ம டீம்ல கூட என்னைய தவிர வேற யாருக்கும் தெரியாது.
ஞாபகம் இருக்கா? அன்னைக்கி உன்னோட PAN Card application fill பண்ணினப்போ தான் எனக்கே தெரியும், அப்போ நான் கேக்கும் போது தான் மற்ற details சொன்ன.
ரவி: ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருப்பாங்க.
ஷீலா: ஓ!!! அப்படீங்களா சார்...அப்புறம் அவளுக்கு எப்படி உன்னோட கோத்திரம்,நட்சத்திரம் எல்லாம் தெரியும் ? ஒரு வேளை, அவளுக்கு தெரிஞ்ச ரவிக்கும் உனக்கும் ஒரே நாள், ஒரே கோத்திரம், ஒரே நட்சத்திரமா இருக்கலாம் இல்லையா ? அதான் ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருக்காங்களே இல்லையா ரவி சார் ? அன்னைக்கு சாப்பிடும் போதும் பாத்தேன்...உன்னையவே பாத்துக்கிட்டு இருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு, கண்ணை துடைச்சிக்கிட்டா..
ரவி: நீ உன் வேலைய பாக்க மாட்டியா? யார் என்ன பண்றாங்கன்ணு தான் பார்ப்பியா ? ஒரு வேளை அவளுக்கு கண்ல தூசு பட்டிருக்கும்.
ஷீலா: எனக்கு என்னமோ இன்னும் சந்தேகாமாவே தான் இருக்கு. சரி அதை விடு, என்னைய எங்க treat கூட்டிட்டு போற ?
ரவி: எங்க வேணும்னாலும் போகலாம், இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[ஷீலா செல்கிறாள், ரவியின் மனது அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவனிடம் பதில்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு படித்த ஒரு கவிதை ஏனோ தேவை இல்லாமல், அவன் நினைவுக்கு வந்தது

என் பிறந்த நாளில்
நீ என் பெயரில் செய்த அர்ச்னையால்
எனக்கும் கடவுளுக்கும் சண்டை,
தினமும்
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் நீ
இன்று என் பெயரில் செய்ததால்
கடவுளுக்கு என் மீது கோபம்
அவருடைய தேவதைகளில் ஒன்றை
நான் அபகரித்துவிட்டேன் என்று.



யாரோ வரும் சத்தம் கேட்டு அவன் நினைவுகள் கலைகின்றன.]

இடம்: Office Cafeteria
பாத்திரங்கள்: சுஜி, ஷீலா மற்றும் Bench மக்கள்
ஷீலா: உன்னைய இன்னைக்கி காலைல கோவில்ல பாத்தேன், சாமி கிட்ட ஏதோ application போட்டுக்கிட்டு இருந்த?
சுஜி: நான் தினமும் கோவிலுக்கு போவேன்
ஷீலா: ஓ! அப்படியா...சரி இந்த வீக்கெண்ட் ப்ளான் என்ன உனக்கு ?
சுஜி: பெருசா ஒண்ணும் இல்ல, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் நீ என்ன பண்ண போற ?
ஷீலா: ரவியோட வெளில போகலாம்னு இருக்கேன்.
சுஜி: ஓ!, சரி ஷீலா, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நாம அப்புறம் மீட் பண்ணலாம்.

ரவி ஷீலாவை அழைத்துச் செல்கிறான் என்று கேட்டவுடன், ஏனோ சுஜியின் மனதில் ஒரு சிறிய வலி அவள் கண்கள் கலங்கின. ஏன் எங்கள் உறவில் இப்படி ஒரு விரிசல்? என்று அவள் மனம் யோசிக்க தொடங்கியது.
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த பொழுது....

தொடரும்.....
பகுதி III

5 comments:

Srii said...

machi.. kalakkura po..

Guna said...

sri said...
//machi.. kalakkura po..//

Thanks Machi.

G3 said...

Kadhai interestinga pogudhu.. adutha part podaleengala?

Guna said...

நன்றி g3. அதிவிரைவில் அடுத்த பகுதி உங்கள் பார்வைக்குக் கிடைக்கும்.

விஜயன் said...

யாரோ வரும் சத்தம் கேட்டு அவன் நினைவுகள் கலைகின்றன

superb da.romba nalla erukku