பகுதி II
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த நினைவுகள்...
ஒரு அழகிய குளுமையான காலைப் பொழுது, சுஜி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இன்று ஒரு MNCயில், அவளுக்கு இறுதிச் சுற்று, ஏற்கனவே 5 தகுதிச் சுற்றுகள் முடிந்து விட்டன. ஐந்திலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் வெகு சிலர் தான். எப்படியும் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் நேர்முகத்திற்க்கு சென்றாள். வந்திருந்த அனைவருமே ஒருவரை ஒருவர், ஏதோ ஒரு தகுதி சுற்றில் சந்தித்திருந்தனர், அப்படித்தான் ரவியையும் அவள் சந்தித்தாள். சந்தித்திருந்தாலும் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. எதேச்சையாக ரவியின் Bio-Data அவள் கண்ணில் பட்டது. ரவியும் அவளுடைய ஊரைச் சேர்ந்தவன் தான் என்பதைக் கண்டவுடன் ஏதோ ஒரு மகிழ்ச்சி அவள் மனத்தில். உடனே சென்று ரவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இருவருமே நேர்-காணலை சிறப்பாக செய்தனர். இறுதிச் சுற்று முடிந்து அன்றே offer letter தருவதாக சொன்னதால், இருவரும் மாலை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.
சுஜி: ரவி, offer letter கிடைச்ச உடனே ஜாயின் பண்ணீடுவீங்களா ?
ரவி: இல்ல சுஜி, ஒரு 10 days டைம் கேப்பேன்
சுஜி: எதுக்கு ?
ரவி: என்னோட Dream Company ஒண்ணுல இன்னும் result சொல்லல, இன்னும் 1 வாரத்துல அதுக்கு result தெரிஞ்சிடும். அந்த offer வந்ததுன்னா, அதத்தான் choose பண்ணுவேன்.
சுஜி: ஓ! All the best
ரவி: Thanks. நீங்க இங்க தான் ஜாயின் பண்ணுவிங்களா ?
சுஜி: ஆமா ரவி, எனக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்..offer வாங்கின அடுத்த நாளே ஜாயின் பண்ணிடுவேன்.
ரவி: ஹ்ம்ம்..
சுஜி: அடுத்து எப்ப ஊருக்குப் போறீங்க ?
ரவி: நம்ம் ஊரு பொங்கலுக்குப் போவேன். நீங்க ?
சுஜி: நானும் போகணும்..நீங்க டிக்கெட் போட்டுட்டீங்களா ?
ரவி: இல்ல, இனிமேல் தான்
சுஜி: நாம சேர்ந்து போலாமே, எனக்கும் சேர்த்து book பண்ணுறீங்களா? உங்களுக்கு ஒண்ணும் problem இல்லையே ?
ரவி: ம்..சரி no problem.
ரவி அவனின் கனவு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான், சுஜியுடனான அவனின் நட்பும் தொடர ஆரம்பித்தது. நீங்கள், நீ ஆனது. வார இறுதி சந்திப்பு மறைந்து, வாரம் முழுவதும் சந்திப்பு தொடர்ந்தது. வாழ்க்கைல புதுசா ஒரு உறவு வரும் போது எல்லாமே நல்லதாகவே நடக்கிற மாதிரி இருக்கும், மனசு எப்போதும் சந்தோஷமா இருக்கும். ரவியும் சுஜியும் அந்த பருவத்தில் தான் இருந்தனர். வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது.
ஆண்-பெண் நட்பில் சலனத்தின் பங்கு மிக முக்கியமானது. சலனம், அது இருவருக்குமே வராமல் இருக்கலாம் அல்லது இருவருக்குமே வரலாம், இந்த இரண்டிலும் அல்லது இந்த இரண்டினாலும் நட்புக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் இருவரில் ஒருவர்க்கு மட்டும் மற்றவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு சிறு சலனமோ, ஈர்ப்போ உருவாகிவிட்டால் அங்கே நட்போ காதலோ மறைய ஆரம்பித்து விடும்.
இந்த நிமிடம் வரை ரவிக்கும் சுஜிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மட்டுமே இருந்து வருகிறது..இப்படியே இருந்திருந்தால், இந்தக் கதையை எழுத அவசியம் இருந்திருக்காது.. இந்த இருவரில் ஒருவர்க்கு மட்டும் அடுத்தவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு வித உணர்வு, மிக ரகசியமாய் வளர்கிறது.. யாருக்கு தோன்றியது ?? இவ்வளவு நாட்கள் தோன்றாத ஒரு விஷயம் இப்போது எப்படி தோன்றியது ?
தொடரும்...
பகுதி IV
4 comments:
Request ivlo seekiram process pannadhukku thanksungo.. aana suspensela mudichirukkeengalae.. so adutha episode-a release panna solli innoru request pottudaren :-))
காயத்ரி ,
வந்து comment பண்ணினத்துக்கு நன்றிங்க. இந்த part ஏற்கனவே draft பண்ணி வச்சிருந்தேன், அதான் வேகமா release பண்ணிட்டேன் ;)
அடுத்த part, கொஞ்சம் time ஆகும்.
நல்ல போய்கிட்டு இருக்கு குணா. ரசித்தேன். வார்த்தை ஜாலத்தில் நல்லாவே விளையாடியிருக்க. அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்.
//கொழுப்பு said...
நல்ல போய்கிட்டு இருக்கு குணா. ரசித்தேன். வார்த்தை ஜாலத்தில் நல்லாவே விளையாடியிருக்க. அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்//
Thanks da.
Post a Comment