பகுதி I | பகுதி II | பகுதி III |
சுஜி: ரவி, என்ன பண்ணுற ?
ரவி: ஆபீசில என்ன ஆடு, மாடா மேய்ப்பாங்க ? வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.
சுஜி: சரி பாத்த வரைக்கும் போதும், உங்க ஆபீஸ் Reception-க்கு வா.
ரவி: யேய், இங்கயா இருக்க ? இரு வர்றேன்.
[ஆபீசிற்கு வெளியே இருவரும் சந்திக்கின்றனர்]
ரவி: இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
சுஜி: உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?
ரவி: என்ன ?
சுஜி: நேத்து உங்க ஆபீசில இருந்து எனக்கு Interview call வந்தது உனக்கு surprise-அ இருக்கட்டுமேன்ணு தான் உன்கிட்ட சொல்லாம வந்தேன்.
ரவி: எப்ப forward பண்ணின ? இன்னைக்கா Interview?
சுஜி: ஏதோ ஒரு job site-ல இருந்து என்னோட Resume எடுத்துருப்பாங்க போல..Interview இப்பத்தான் முடிஞ்சது,நல்லா பண்ணிருக்கேன்.
ரவி: ஓ..குட் கலக்குற..
சுஜி: சரி இன்னைக்கி ஈவினிங் ராகிகுடா கோவில்க்கு வா, உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். சரியா ?? நான் இப்ப கிளம்பறேன், bye.
ரவி: சரி வா, உன்னைய drop பண்ணிட்டு நான் ஆபிஸ்க்கு வர்றேன்.
[மாலை ரவி கோவிலுக்குள் நுழைகிறான்..சுஜி அவனை நோக்கி வருகிறாள்.]
சுஜி: ஏண்டா முக்கியமான விஷயம்ன்னு சொன்னேன்ல, இவ்வளவு லேட்டா வர்ற ?
ரவி: haloo madam, ஈவினிங் Bangalore trafficல வண்டி ஒட்டி பாக்கணும், சும்மா இங்க உக்காந்துகிட்டு பேச கூடாது.
சுஜி: சரி சண்டைய ஆரம்பிக்காத, வா என்னோட..
சுஜி: ரவி, இது ரமேஷ், என்னோட ஆபீசில வொர்க் பண்றாரு..
ரமேஷ்: ஹாய் ரவி
ரவி: ஹாய் ரமேஷ்
[அப்பொழுது ரமேஷின் அலை பேசி, அழைக்கிறது, ரமேஷ் சற்று தள்ளி சென்றவுடன்]
சுஜி: ரவி, ஆள் எப்படி ?
ரவி: ம்ம்...நல்ல இருக்காரு..ஏன் ?
சுஜி: உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு கோபப்படாத. முதல்ல friend-அ தான் பழகினோம், அப்றம் அவர் சொன்னாரு, நான் கொஞ்ச நாள் யோசிச்சேன், அப்றம் இன்னைக்கி காலைல சரின்னு சொல்லிட்டேன்..முதல்ல உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் உன்னைய வர சொன்னேன்.
ரவி இதை எதிர் பார்க்கவில்லை. உடம்பில் ஒரு உறுப்பை இழந்தது போன்ற ஒரு வலி அவன் மனதில். காரணம் புரியவில்லை, கண்கள் கலங்கின, கால்கள் நடுங்கின. ஒன்றுமே தோன்றாமல் திரும்பி நடந்தான். சுஜி கூப்பிட்டதையும் பொருட்படுத்தாமல் திரும்பிச் சென்றான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது இன்னும் ஆச்சரியம் தான். அலைபேசியை அணைத்து வைத்தான். கண்களை மூடினால், கண்ணீர் கசிந்தது. அவளை இன்று மாலை வரை தோழியாக தானே நினைத்தேன், எனக்குள் ஏன் இந்த சோகம், வலி கண்ணீர் எல்லாம். என்னையும் அறியாமல் என் மனத்தை அவள் எப்படி ஈர்த்தாள்.
அரனுக்காக இல்லாமல் அவளுக்காக அந்த ராத்திரியை சிவராத்திரி ஆக்கினான். தினமும் இனிமையாக விடியும் அந்த காலை பொழுது, அன்று அவனுக்கு கசப்பாக தோன்றியது. இரவின் தூக்கமின்மை கண்களில் தெரிந்தது, வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.
தொடரும் ...
பகுதி V
9 comments:
ஆஹா வில்லன் வந்துட்டானா? அதான் தல சோகமா இருக்காரா?
சீக்கிரம் அடுத்தபாகத்தை போடு குணா.
Thanks ரமேஷ். அடுத்த பகுதியை விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்.
Nalla viruviruppa kondu poreenga.. waiting for the next part :-))
nalla erkkuda..arumai.
katha eluthuratha sollave ella paarthiya..sari bsvijayan@gmail.com idku mattum climax mail pannidu..
continue da..
Thanks G3.
சரவணா....Thanks da.
Mail ellam annupa mudiyathu..vanthu padichittu comment sollitu po ;)
machii..kalakkra machi... Sri
romba touching aa pogudhappa....
Hi anna,
Romba nalla irruku, adutha partkaga wait pannum anbu vasaki
SelviPrakash
Post a Comment