Wednesday, October 27, 2010

ஓரு துளி இரத்தம் - 1

காலைச் சூரியன் உதயமாகும் நேரம், கடற்கரையில் வாசனும் கீர்த்தியும் உடல் இளைக்க வேண்டி ஒடிக் கொண்டிருந்தனர்.

”என்னங்க, இவ்வளவு மெதுவா ஒடினா எப்படி உங்க தொப்பை குறையும்? நல்லா வேகமா ஓடி வாங்க..”

கீர்த்தி திரும்பிப் பார்த்துச் சொல்லிக் கொண்டே, காலில் ஏதோ இடற மணலில் விழுந்தாள்.

“என்னாச்சு கீர்த்தி?” கேட்டுக் கொண்டே, வாசன் அவள் அருகில் சென்றான்.

கீர்த்தியின் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.. அங்கே ஒரு உடல் மல்லாந்து கிடந்தது.

அதன் நெற்றியில் ஓரு துளி இரத்தம் உறைந்து கறுத்து இருந்தது.

======================================================

ட்ரிங் ட்ரிங்..

”Hello, Police Control room”

”சார், நான் Marina beach’ல இருந்து பேசுறேன், இங்க ஒரு dead body கிடக்கு”

“நீங்க யாரு? உங்க பேர் என்ன?”

“என் பேர் வாசன். நான் ஒரு டாக்டர், Triplicane’ல clinic வச்சிருக்கேன்”

“Dead body ஆம்பளையா? பொம்பளையா?”

“ஆம்பளைதான் சார். பார்க்க 25-30 வயசுப் பையன் மாதிரி இருக்கான்”

“ஓகே டாக்டர். நீங்க அங்கயே இருங்க. இன்னும் 5 minutes’ல patrol உங்களை contact பண்ணுவாங்க. நீங்க அவங்களுக்கு land mark சொல்லுங்க. உங்க mobile number 98x xxx xxxx, இதுதானா?”

“ஆமா சார், சரிதான்”

”இன்னும் 5 minutes’ல patrol உங்களை contact பண்ணுவாங்க”

“ஓகே சார், நான் wait பண்றேன்”

“என்னங்க.. உங்களுக்கு இது தேவையா? இப்போ அவங்க வர்ற வரைக்கும் wait பண்ணனும், அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும், அப்புறம் விசாரணை, கோர்ட், கேஸுன்னு அலையணும்”

“இல்லை கீர்த்தி. Body almost decomposed. So, எவ்வளவு வேகமா postmortem பண்றாங்களோ அவ்வளவு better'ஆ results கிடைக்கும்”

“என்னமோ போங்க. இன்னைக்கு முழிச்ச முகமே சரியில்ல”

கீர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசனின் அலைபேசி அழைத்தது.

“ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் விக்ரம் பேசுறேன். டாக்டர் வாசன்?”

“ஆமா இன்ஸ்பெக்டர்”

“நீங்க exact’ஆ எங்க இருக்கீங்க?”

“உழைப்பாளர் சிலைக்குக் கொஞ்ச தூரம் பின்னால, blue track suit, yellow T-shirt போட்டிருக்கேன்”

வாசன் பேசிக்கொண்டிருக்கும்போதே போலீஸ் ஜீப் உழைப்பாளர் சிலை அருகே வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் விக்ரம் ’ஒரு கைதியின் டைரி’ கமல்ஹாசன் சாயலில் இருந்தான்.

“தேங்க்ஸ் டாக்டர். Body’ய எப்போ பார்த்தீங்க?”

“நானும் என் மனைவியும் தினமும் காலையில jogging வருவோம். இன்னைக்கும் அதே மாதிரி வந்தப்போதான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் பார்த்தோம்”

”நீங்க பார்க்கும்போது இந்தப் பக்கத்துல சந்தேகப்படுற மாதிரி யாராவது இருந்தாங்களா? இல்லை, ஏதாவது ஒரு வண்டி ரொம்ப வேகமா cross பண்ணுச்சா?”

“அப்படி எதுவும் இல்லை. ஆனா, as a doctor, இந்த பாடியைப் பார்த்தவுடனே எனக்குத் தெரிஞ்சது அந்த நெத்தியில இருக்குற ரத்தம் அந்த பாடிக்கு மேலே யாரோ வச்ச மாதிரி இருக்கு”

“ஓகே டாக்டர், தேங்க்ஸ். வேற எதாவது தேவைன்னா நாங்க உங்களுக்குக் கால் பண்றோம். நீங்க போகலாம். இதை இனிமேல் நாங்க பாத்துக்குறோம். நீங்க உங்க அட்ரெஸ் மட்டும் குடுத்துட்டுப் போங்க”

“ஷ்யூர் இன்ஸ்பெக்டர். இதுதான் என்னோட card. Contact me anytime”

“Thanks for your co-operation, doctor”

“No problem இன்ஸ்பெக்டர், நாங்க கிளம்புறோம்”

“ஓகே டாக்டர்”

”மணிகண்டன், ambulance’க்கு phone பண்ணியாச்சா?”

“On the way, sir..”

“மணிகண்டன், பாடியோட shirt பாக்கெட்’ல ஏதோ paper மாதிரி தெரியுது. என்னன்னு பாருங்க”

“சார்.. ஏதோ ரத்தத்துல எழுதிருக்கு சார்”

விக்ரம் அதை பார்த்தான், அதில்




...தொடரும்

[Note: Thanks to my wife, for helping me in typing these Tamil fonts and for immediate feedbacks and corrections]

4 comments:

rameshbabublogger said...

கலக்குற நண்பா....

sshanmug said...

next part eppo?

நிலாக்காலம் said...

கலக்குற நண்பா....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

good start...super