Tuesday, May 15, 2007

என் சோக கதையை கேளு Blog குலமே

இந்திய மண்ணுல கால் வச்சதும், அப்படியே மெய் சிலிர்த்து போச்சி ( டேய், போதும் அடங்குன்னு நீங்க சொல்றது கேக்குது), matter என்னன்னா, Onsite-ல இருந்து வந்தா, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு ஆணி கிடையாது. ஏன்னா off-shore-ல எல்லாருமே வெட்டியா தான் இருக்கோம், அப்படின்னு எங்க offshore நண்பர்கள் சொன்னத நம்பி, நானும் சந்தோஷமா வந்தேன்.

நண்பர்கள் சொன்ன மாதிரியே, வந்ததும் ஆபீசில ஒரு வேலையும் இல்ல. இந்த 4.5 வருட Software Engineer வாழ்க்கைல முதல் முறையாக, BENCH ல இருந்தேன், ஆகா!!! என்ன சுகம் ! என்ன சுகம்!.. சரி இப்படி Bench ல இருக்கும் போதே, நம்முடைய சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேற்றிடலாம், அப்படின்னு, முதல் வேலையா, போய் ஒரு Basket Ball, வாங்கிட்டு வந்தேன். Daily காலைல நானும் என்னோட room-mate-um, எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஒரு Basket-Ball court-ல போய் விளையாடலாம்ன்ணு ப்ளான் போட்டோம். அடுத்த நாள் காலைல 6:30 மணிக்கு போய் வெற்றிகரமா எங்களோட practice-a ஆரம்பிச்சோம். ஒரு 7:15 வரைக்கும் விளையாடி களைச்சு, வீட்டுக்கு போறப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அதே சந்தோஷத்தோட, office போனேன். வழக்கம் போல lunch வரைக்கும் ஜாலியா gmail,cricinfo, அப்படின்னு சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க தலைவர் கூப்பிட்டு, ஒரு phone-call attend பண்ண சொன்னாரு..யாரோ technical-அ, என்ன என்னமோ கேட்டாங்க, நானும் சும்மா ஜாலியா பதில் சொன்னேன். சாயங்காலம் எங்க தலை என்னய கூப்பிட்டு, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு Gurgaon ல வேலை இருக்கு, நீ அங்க போ ராசா ன்னு, சொன்னாரு. எனக்கு ஒரே ஷாக்!!! என் கனவு எல்லாம், ஒரு நிமிஷத்துல அப்படியே கலான்சு போச்சு :(. எப்படியோ அவரை சமாளிச்சு, ஒரு நாலு நாள், எங்க ஊருக்கு போய், திருவிழா பாத்துட்டு, exhibition போய்ட்டு[I will put a separate post on my trip to Sivakasi].

ஊர விட்டு வர மனசே இல்லாம, மதுரைல இருந்து Delhi-க்கு வந்தேன். இன்னும் 2 மாசத்துக்கு இங்க தான் குப்பை கொட்ட போறேன் :(. இப்படியாக நான் ஒரு Michael Jordan ஆக உருவாகுவதை இந்த சமுதாயம் தடுத்து என் கனவுக் கோட்டையை இடித்து விட்டது :(

3 comments:

Sasikumar said...

குணா...கலக்குறியேடா...நல்லா இருக்கு...தொடந்து எழுது....என் ஒர்குட் ல பதில் அனுப்பு...

Anonymous said...

Excellent. Keep posting. I enjoy reading your post.

Radha

Guna said...

நன்றி ராதா.