பகுதி I | பகுதி II | பகுதி III | பகுதி IV |
இரவின் தூக்கமின்மை ரவியின் கண்களில் தெரிந்தது. வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.சுஜியை அவன் இப்போது இங்கு எதிர் பார்க்கவில்லை. அவள் முகத்தைப் பார்க்க கூட அவனால் முடியவில்லை. ரவி ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்கும் புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று அவள் அமைதியாக இருந்தாள். இருவரின் மௌனத்தால், அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. நல்ல நட்புகளுக்கும், காதல்களுக்கும் இடையே உள்ள மௌனம் அழகாக இருக்கும். ஆனால் அங்கு நிலவிய மௌனத்தை இருவராலும் ரசிக்க முடியவில்லை சுஜியே மௌனத்தைக் கலைத்தாள்
சுஜி: என்னாச்சு ரவி ? ஏன் திடீர்னு கிளம்பி வந்துட்ட ? உனக்கு ரமேஷ பிடிக்கலையா ? இல்ல நான் love பண்றது பிடிக்கலையா ? ஏதாவது பேசு ரவி. இப்படியே பேசாம இருக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல.
[அவள் முகத்தைப் பார்க்காமல், திரும்பி நின்றபடியே பேச ஆரம்பித்தான்]
ரவி: என்னால இப்ப எதுவும் பேச முடியாது
சுஜி: உன்னைய பாத்தாலே தெரியுது, ராத்திரி எல்லாம் தூங்கலைன்னு. என்ன பிரச்னை உனக்கு? ஒண்ணும் இல்லன்னு மட்டும் சொல்லாத.
ரவி: எனக்கு நிஜமாவே தெரியல சுஜி, எப்ப இருந்து எனக்கு உன்மேல...[வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளிவர மறுத்தன] நான் இது வரைக்கும் அப்படி எல்லாம் நினைச்தசதே இல்ல. ஆனா நேத்து நீ கோவில்ல சொன்னவுடனே, எனக்கு என்ன சொல்லணு தெரியல.
சுஜி: நான் உன்னைய அப்படி நினைக்கலையே ரவி. கடைசி வரைக்கும் எனக்கு ஒரு நல்ல frienda தான் இருக்கணும்னு நினைச்சேன். என்னால உன்னைய அப்படி நினைக்க முடியல ரவி. எனக்கு உன் மேல அப்படி ஒரு நினைப்பே வந்தது இல்ல. எங்க அம்மா, அப்பா மாதிரி தான் ரவி நீயும் எனக்கு. கடைசி வரைக்கும் ஒரு நல்ல நண்பனா மட்டுமே தான் என்னால உன்னைய பாக்க முடியும். என்னால உன்னைய வேற எந்த உறவோடையும் கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. நீ என் காதலன் சொல்றத விட நீ என் நண்பன் சொல்றதுல தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. இதை எல்லாம் மறந்துட்டு, திரும்ப பழைய மாதிரியே ஒரு நல்ல frienda இரு ரவி, ப்ளீஸ்.
ரவி: எல்லாத்தையும் மறக்கணும்னு தான் நினைக்கிறேன், என்னால முடியல சுஜி. மனசுக்குள்ள இப்படி ஒரு என்ணத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட ஒரு நல்ல frienda பழக முடியும்னு எனக்கு தோணலை
சுஜி: இப்படி எல்லாம் பேசாத ரவி. எனக்கு கஷ்டமா இருக்கு. உன்னால முடியும் ரவி. நாம பழைய மாதிரியே இருக்கலாம்.
ரவி: இல்ல சுஜி. என்னால, உன் முன்னாடி நடிக்க முடியாது.நான் உன்கூட இருக்குற வரைக்கும் உனக்கும் கஷ்டம்,எனக்கும் கஷ்டம்.
சுஜி: எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. நீ இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு. நான் எப்பவும் மாதிரி தான் ரவி இருப்பேன். என்னால உனக்கு ஒரு கஷ்டமும் வராது.
ரவி: உனக்கு ஒரு நல்ல frienda மட்டும் இருக்க முடியும்னு எனக்கு தோணலை சுஜி. இனிமேல் என்னைய பாக்க வராத என்னால முன்னாடி மாதிரி உன்கூட பேசவோ பழாகவோ முடியாது.
சுஜி: நான் என்ன ரவி தப்பு பண்ணினேன் ? எனக்கு ஏன் தண்டனை கொடுக்குற. நீ இப்ப நல்ல மூட்ல இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பாரு. நம்ம friendship வேண்டாம்ன்ணு மட்டும் சொல்லிடாத.
ரவி: நான் யோசிச்சிட்டுத் தான் சொல்லிறேன். இது ரெண்டு பேருக்கும் கஷ்டம். வேண்டாம்.
[சுஜி எவ்வளவோ முயற்சித்தும், ரவியின் மனத்தை அவளால் மாற்ற முடியவில்லை அன்றிலிருந்து அவன் அவளின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டான் இன்று இருவரும் ஒரே அலுவலகத்திலும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறான். சுஜியின் நினைவுகள் கலைகின்றன..மறு நாள் ]
ஷீலா: சுஜி, ரவி resign பண்ணிட்டானம். ஏன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ? எங்க போறன்ணு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ?
சுஜி: ஓ..அப்படியா ??
[ரவி அவளிடம் இறுதி வரை பேசவில்லை. ரவி அந்த அலுவலகத்தை விட்டுச்சென்ற மறுநாள், சுஜிக்கு அவனிடமிருந்து வந்த மின்னஞ்சல்]
சுஜி,
உன்னைய hurt பண்ணினதுக்கு மன்னிச்சுடு. என்னால உன்னைய மறக்க முடியல. என்னைய விரும்புன்னு உன்னைய எப்படி நான் கட்டாயப்படுத்த முடியாதோ, அதே மாதிரி தான் என்னாலயையும் என் மனச கட்டாயப்படுத்த முடியல உன்னைய மறக்குறதுக்கு. நாம பக்கத்துல இருக்குற வரைக்கும், இது மாறப்போறது இல்ல. அதான் கொஞ்சம் விலகி போறேன்.
அன்புடன்,
ரவி.
முற்றும்.
7 comments:
Sogama mudichiteenga :-(
enna pannrathu..Ravi koduthu vachathu avvalavu thaan :(
கஷ்டப்படுத்திட்டியே குணா. லவ் பண்ணதுக்கப்புறம் நண்பர்களா இருக்கமுடியாது. இது நிறையபேருக்கு தெரியறதில்லை.
நல்லா இருந்தது குணா. அடுத்த கதைய சீக்கிரம் எழுது.
வாழ்த்துகள்.
Nandri Nanba.
enna Ramesh, anubhavama ???
sari, intha kelvi ellam naan ippa kekka koodathu ;)
machi..
am impressed seeing all these to try something from my side..
Its great da..!!
keep Going !
Ithu kathaiya ill unga experience sa??
//Ithu kathaiya ill unga experience sa?? //
இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள், இடங்கள், அனைத்தும் கற்பனையே :P
Post a Comment